க்வாஜா மக்துமின் மறுப்பு
ஒரு நாள் ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள்
நடந்து சென்று
கொண்டு இருந்த
போது இரண்டு
மாதுக்கள் குளத்தில் குளித்து கொண்டு
இருந்தனர், அவற்றில் ஒருவர் தனக்கு
மருமகளாய் வரப்போகிறவர் என அறிந்த ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள் அருகில் நின்ற காவலாளியிடம் வினவ, அப்பெண்கள் எமேனிலிருந்து வந்த செய்யிது
வமிஷத்தை சேர்ந்த
கப்பல் வணிகம்
புரிகிற க்வாஜா
மக்தும் மகளாவர்
என கூறினார்.
ஹஜ்ரத் நாகூர்
ஆண்டகை அவர்கள். “ க்வாஜாவை என வந்து பார்க்க சொல்லும்
என காவலாளியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.
செய்தி கேட்ட க்வாஜா மக்தும்
அவர்கள் தம்மை அழைத்த காரணம்
அறிவோம் என்றும், பரதேசியாய் வாழ்ந்து
கொண்டு இருப்பவர்களுக்கு செல்வ சீமான் வீட்டில்
சம்மதம் செய்ய விருப்பம் இல்லை என செருக்காய் கூறினார்கள்.
No comments:
Post a Comment