Pages

Friday, June 8, 2012

முயினுத்தீனின் விடுகதை


முயினுத்தீனின் விடுகதை 

மக்ரிப் தொழுகைக்குக் பிறகு முப்தி அவர்களே இங்கே வாருங்கள் என்று ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் அழைத்தார்கள். அல்லா உங்கள் நாட்டத்தை நிறைவேற்றி தருவானாக.. ஹஜ்ரத் முயினுத்தீன் இப்போது உங்களுக்கு ஒரு புதிர் போடா போகிறார் . அதற்க்கு விட தெரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது என்றார்கள். பின்னர் நாகூர் ஆண்டகை அவர்கள் சென்று விட்டார்கள்.

ஹஜ்ரத் முயினுத்தீன் தொடர்ந்தார்.. என்னிடம் ஒரு விதை உள்ளது அதை பூமியில் போட்டு பயிராக்கினால் உலகின் துன்ப துயரங்களை களைய கூடிய சஞ்சீவ மணிகளை தரும். ஆனால் எனக்கு சொந்தமான நிலம் எங்கும் கிடையாது. இந்நிலையில் பயிர் விளைவிக்க முடியாத தரிசு நிலத்திற்கு சொந்த காரர் ஒருவர் என்னிடம் வருகிறார். தமது நிலத்தின் மலட்டு தன்மையை நீக்குமாறு கேட்கிறார்.

தமது விதையை உமது நிலத்தில் நீர் விதைத்தல் இந்நிலத்தின் மலட்டு தன்மையை நீக்கி பயிராகி காய்த்து குளுங்குவதுடன் மலட்டு தன்மை நீங்கிவிடும் மேலும் அதன் பின் நீர் விதைகின்ர விதைகள் எல்லாம் பொய்க்காமல் பயிராகும். ஆனால் ஒரு நிபந்தனை எனது விதையின் பயிர் முழுவதையும் நானே எடுத்து கொள்வேன்.நிலத்திற்காக நீர் என்னிடம் பங்கு கேட்க கூடாது அது நியாமமும் இல்லை என்கிறேன் அப்போது அவர் என்ன சொல்வர். எனது கருத்தை ஏற்பாரா, அற்று கொண்டால் தர்மம் ஆகுமா என வினவினார்கள்.

நிச்சயமாய் அவர் ஏற்று கொள்வதுதான் தர்மம் என முப்தி கூறினார்கள். எப்படி தர்மம் ஆகும்  ஹஜ்ரத் முயீனுத்தீன் அவர்கள் என வினவினார்கள். அதற்க்கு முப்தி அவர்கள் விதை உங்களுடையது அதில் தான் மூல பொருளான சக்தி உள்ளது, அந்த சக்தியின் மூல நிலத்தின் மலத்தன்மை நீக்க படுகிறது. நிலத்தின் தேவை சிறிது இருந்தாலும் மூல பொருளின் பொருட்டே தானியம் உருவாகிறது, மேலும் நிலத்தின் சக்தி அதிகரிக்க படுகிறது. எனவே மூல பொருளின் சொந்த காரருக்கே மூல பொருள் சொந்தம் அப்புறம் விதைக்கு நிலம் எப்படி பங்கு கேட்க முடியும் என்றார்கள்.

சரியாக புரிந்துளீர்கள்  முப்தி அவர்களே.. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் பின்னர் இது உங்களுக்கு உதவும் என ஹஜ்ரத் முயினுத்தின் கூறினார்கள் என மவாஹிபுல் மக்கிய்ய பிஷமாயிலி ஹைரில் பரிய்யா என்ற நூலில் கூறபடுகிறது. 

பின்னர் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் யோசனையில் ஆழ்ந்தார்கள். உமது மைந்தராய் பூமிக்கு வர துடிக்கும் அல்லாஹ்வின் அருள் சுமந்தவர் இந்த மண்ணின் வாசனையை சுகிக்க வேண்டியுள்ளது என்ற தமது குரு நாதரின் பேச்சை எண்ணி பார்த்தார்கள். உலகின் இதற்க்கு முன் நடந்திராத வகையில் மைந்தரின் ஜனன சம்பவம் நிகழ போகிறதை எண்ணி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்கள்.

No comments:

Post a Comment